கொரோனா பரவலுக்கு மத்தியில், கர்ப்பிணித் தாய்மாருக்கு மகிழ்ச்சியான செய்தி..!

நாடு பூராகவும் அபாய நிலைமையிலுள்ள கர்ப்பிணித் தாய்மாருக்கு கொரோனா தடுப்பூசியை எதிர்வரும் புதன்கிழமை முதல் செலுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
தமது சங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, இந்த அனுமதி கிடைத்ததாக பிரசவ விசேட வைத்தியர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
இதன்படி,
பிலியந்தலை பகுதியில் எதிர்வரும் புதன்கிழமை முதல் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு காசல் பெண்கள் வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை கொரோனா தொற்று காரணமாக இதுவரை 08 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்துள்ளனர்.