பிள்ளையார் சிலை உடைத்து திருட்டு!!!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மூங்கிலாறு பகுதியில் உள்ள சிவன் ஆலயத்தில் பரிவார மூர்த்தியாக பிரதிஷ்டை செய்யப்பட்ட பிள்ளையார் சிலை உடைத்து களவாடப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்
கடந்த 03ஆம் திகதி அன்று ஆலய குருவை நித்திய பூசை செய்ய வேண்டாம் எனவும் அயலவர்களை கோவில் பக்கம் செல்ல வேண்டாம் என்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்சரித்த நிலையில் அன்று இரவே சிலை காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
