பிரதேசமொன்றின் மதுபானசாலைகள் 10ம் திகதி முதல் 24ம் திகதி வரை பூட்டு

கதிர்காமம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள மதுபானசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 10ம் திகதி முதல் 24ம் திகதி மூடப்படவுள்ளதாக கலால் வரித் திணைக்களம் தெரிவிக்கின்றது.
வருடாந்த உற்சவத்தை முன்னிட்டே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கதிர்காமம் வருடாந்த உற்சவத்தை, இந்த முறை பக்தர்கள் இன்றி நடத்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.