அரசிலிருந்து விலகலாம்;மைத்திரி அணிக்கு பதிலடி

அரசாங்கத்தில் இருந்து விலக முடிவு செய்தால் விலக அனைத்து உரிமையும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இருக்கிறது என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசில் இருந்து விலகினாலும் அரசாங்கத்திற்கு அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.