Header Ads

Breaking News
recent

மேலும் ஒரு பிரதேசம் தனிமைப்படுத்தலில்!


இன்று (04) காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் பிரதேசமொன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, கண்டி மாவட்டத்தின் கட்டுகஸ்தொட்ட காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட யட்டிவாவல கிராம சேவகர் பிரிவில் சாகராதெனிய தோட்டம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, களுத்துறை மாவட்டத்தின் மஹா வஸ்கடுவ தெற்கு கிராம சேவகர் பிரிவும், மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரியகல்லார் 3 மற்றும் பெரியகல்லார் 3 தெற்கு கிராம சேவகர் பிரிவுகளும், நுவரெலியா மாவட்டத்தின் பெரமன தெற்கு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டன.
Powered by Blogger.