ஒருதொகை கேரள கஞ்சா பொதிகளுடன் இளைஞர் ஒருவர் கைது...

மன்னார் - தாழ்வுபாடு பகுதியில் ஒருதொகை கேரள கஞ்சா பொதிகளுடன் இளைஞர் ஒருவர் கைது இன்று(24) செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 10 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மன்னார் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
