பாலர் பாடசாலைக்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு...
திருகோணமலையின் பின்தங்கிய கிராமங்களில் ஒன்றான கரடிப்பூவல் கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் பாலர் பாடசாலைக்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு
நேற்று (25) திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை கௌரவ உப-தவிசாளர் முகம்மட் நௌபர் அவர்களினால் பலர் பாடசாலையின் நிர்வாகத்தினரிடம் இவ் தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டது
திருவள்ளுவர் பாலர் பாடசாலையின் நிர்வாகத்தினர்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றார்களினால் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை கௌரவ உப-தவிசாளர் முகம்மட் நௌபர் அவர்களிடம் எழுத்து மூலமான கோரிக்கை விடுத்ததினை அடுத்து இவ் தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டது
இந்நிகழ்வில் பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள் நிர்வாகிகள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.