நாட்டில் துப்பாக்கிகளுடன் இருவர் கைது

நாட்டில் இரு வேறு இடங்களில் துப்பாக்கிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அந்தவகையில் வவுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மன்குளம் பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடும் இரு துப்பாக்கிகளுடன் அதே பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டு நேற்றை தினம் வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அதே வேளை அம்பாறை மங்களகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் தெஹியத்தகண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளாதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.