Header Ads

Breaking News
recent

கட்சி மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்த அனுரகுமார


1988 ஆம் ஆண்டு தனது வீடு தீக்கிரையாக்கப்பட்டதாகவும், அதன் வலி தனக்கு நன்றாகவே தெரியும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (18) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், 9 ஆம் திகதி வன்முறையைத் திட்டமிட்டதாக தமது கட்சி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் எந்தவொரு செயற்பாட்டாளரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.