Header Ads

Breaking News
recent

இரண்டு வாரங்களுக்கு தேவையான எரிவாயு


எரிவாயுவைக் கொண்ட இரண்டு கப்பல்களுக்கு நாளைய தினம் பணம் செலுத்தப்படவுள்ளது.
எரிவாயுவைக் கொண்ட இரண்டு கப்பல்களுக்கு நாளைய தினம் பணம் செலுத்தப்படவுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் இரண்டு வாரங்களுக்குப் போதுமான எரிவாயு இருக்குமென்று லிற்றோ காஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட இரண்டு கப்பல்களுக்கும் நாளை 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்படவுள்ளன.

நிறுவனத்திடம் தற்போது 6 தினங்களுக்குப் போதுமான எரிவாயுவே உண்டு.

இன்று முதல் 80 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளன. இவற்றில் 30 ஆயிரம் கொழும்பு - கம்பஹாவிற்கும், ஏனைய மாவட்டங்களுக்கும் விநியோகிக்கப்படவுள்ளன.
Powered by Blogger.