மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் படுகாயம்...
மட்டக்களப்பு ஊறணி பகுதியில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்தவர்கள் மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம் அருகில் காத்திருந்தவர்கள் மீது வீதியில் பயணித்த தனியார் பஸ் மோதியதில் இன்று அதிகாலை விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செங்கலடி பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் ஊழியர்களுடன் ஆரையம்பதி நோக்கிபயணித்த தனியார் பஸ் ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளானமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம் அருகில் காத்திருந்தவர்கள் மீது வீதியில் பயணித்த தனியார் பஸ் மோதியதில் இன்று அதிகாலை விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



