திருமலையில் திடீரென தீப்பிடித்த சொகுசு கார்...
திருமலை ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை கண்டி பிரதான வீதியில் திடீரென சொகுசு கார் ஒன்று தீப்பிடித்ததாக திருகோணமலை தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
திருகோணமலை கண்டி பிரதான வீதியில் ஆண்டாாங்குளம் பிரதேசத்தில் இன்று (10) பிற்பகல் 2 மணியளவில் குறித்த சொகுசு கார் தீப்பிடித்ததாக தெரியவருகின்றது.
குறித்த காரில் சாரதி மாத்திரம் பயணித்திருந்ததாகவும் கார் தீப்பிடித்ததில் கார் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் குறித்த காரில் ஏற்பட்ட தீப்பரவளை பொது மக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் குறித்த காரில் தீப்பறவியமைக்கான காரணம் இதுவரை தெரிய வராத நிலையில் மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக போலீசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
