Header Ads

Breaking News
recent

கிளினிக் நோயாளர்களுக்கான மருந்து விநியோகம்







(அப்துல்சலாம் யாசீம்) 

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளில் கிளினிக்கில் பதிவு செய்து மாதாந்தம் தொடர்ந்து மருந்து பெற்று வருபவர்கள் உடனடியாக தமது கிளினிக் நடைபெறுகின்ற வைத்தியசாலையுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பின்வரும் தகவல்களை வழங்குவதன் மூலம் உங்களது மருந்துகளை உங்களது வீட்டிற்கே கொண்டு வந்து தருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வீ. பிரேமானந் தெரிவித்தார். 
நோயாளர்கள் பதிவு செய்ய வேண்டிய தகவல்களாக 
1. முழுப்பெயர்
2. வயது
3. பால்
4. கிளினிக் இலக்கம் (தங்கள் கிளினிக் கொப்பியில் எழுதப்பட்டிருக்கும்)
5. தொலைபேசி இலக்கம்  மற்றும் அடையாள அட்டை இலக்கம்
6. தபால் முகவரி  போன்ற விடயங்களை வழங்குமாறும் 
வைத்தியசாலையின் தொலைபேசி இலக்கம் தெரியாவிடின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். 

0718261265
0718049169

அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு இரத்தம் மாற்றப்பட்டு வரும் நோயாளர்கள் அருகிலுள்ள வைத்திய சாலைக்குச் சென்று அவ்வைத்தியசாலை ஊடாக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு வருகைதந்து தங்களது இரத்த மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 இதேவேளை பிரதேச வைத்தியசாலை களிலிருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு  மேலதிக சிகிச்சைக்காக அழைத்து வரும் நோயாளர்களின் நலன் கருதி  சிகிச்சை முடிவவுற்றதையடுத்து மீண்டும் அவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்குரிய அனுமதியினையும், ஆலோசனைகளையும் வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். 
Powered by Blogger.