இரத்த தானம் செய்பவர்களுக்கான அறிவிப்பு...!
கொரோனா வைரஸ் தாக்கம் : தேசிய குருதி மாற்று மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் விடுக்கும் அறிவிப்பு
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தேசிய குருதி மாற்று மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தேசிய குருதி மாற்று மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரத்த தானம் செய்பவர்களுக்கு இன்று முதல் விசெட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தேசிய குருதி மாற்று மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
இதனூடாக ரத்ததானம் செய்பவர்களை தொடர்பு கொள்ளமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
