தம்பலாகம அரபா நற்பணி மண்றத்தினால் நிவாரணப்பணிகள்!!

பசி பட்டினியால் வாடும் மக்களுக்காக நிவாரணப் பணி அரபா நற்பணி மன்றத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு வழங்கி வைக்கப்படுகின்றது.
தொடர்ச்சியாக நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக மக்கள் வெளியில் செல்ல முடியாமலும் தொழில் இன்றியும் உணவுக்கு வழியில்லாமல் திண்டாடும் இந்த காலகட்டத்தில் மக்களின் நலன் கருதி வயிற்றுப் பசி போக்கும் வேலைத் திட்டத்தில் தம்பலகாம பிரதேசத்தில் அரபா நற்பணி மன்றம் பாரிய வேலைத் திட்டம் ஒன்றை ஆரம்பித்து மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை பகிர்ந்தளிப்பது மிகவும் வரவேற்கத் தக்க விடயமாகும்.

