மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுக்கும் எச்சரிக்கை!!
(புத்தளம் ஹிசாம்)
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவும் வீதம் அதிகரித்துள்ள காரணத்தினால் பழைய தீர்மானங்களை இனியும் முன்னெடுக்க முடியாது. ஊரடங்கை தளர்ப்பதன் மூலமாக வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது என்கிறது அரச மருத்தவ அதகாரிகள் சங்கம்.
தனி நபர்கள், தனி சமூகத்தின் இடையில் வைரஸ் பரவ இடமளித்தால், அடுத்த மாத இறுதிக்குள் நாடு மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும், அவ்வாறான அச்சம் நிலவுகின்றது எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்
