Header Ads

Breaking News
recent

இலங்கையில் அதிகமான கொரோனா வைரஸ் நோயாளர்கள் இருக்கின்றார்கள் : முன்னாள் சுகாதார அமைச்சர்.

இலங்கையில் அதிகமான கொரோனா வைரஸ் நோயாளர்கள் இருப்பதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

லங்காதீப சிங்களப் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் இதை கூறியுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அண்மையில் உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்திய நாடுகளின் பட்டியல் ஒன்றை வெளியிட்டது.

அதில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்திய நாடுகளின் பட்டியலில் இலங்கை இருக்கவில்லை.

அத்துடன் இலங்கையில் அரசாங்கம் கூறுவது போல் அன்றி அதிகமான கொரோனா வைரஸ் நோயாளர்கள் இருப்பதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.