உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பு!
(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 192 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இலங்கை சுவிசேஷ ஐக்கிய தேசஇலங்கு சுவிசேஷ ஐக்கிய திருச்சபையின் நிதி உதவியினால் போதகர் செல்வராஜா ஜெயகாந் அவர்களினால் (26) வழங்கி வைக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெறுகல் முகத்துவாரம், சூர நகர் கல்லடி மற்றும் கோமந்தலாமடு, அம்மந்தனாவெளி போன்ற கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கே இந்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


