Header Ads

Breaking News
recent

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி தனது குடும்பத்தினரை திருகோணமலைக்கு அழைத்துச் சென்ற பொலிஸ் அதிகாரி !!


(திருமலை நிருபர்)
தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊரடங்கு காலத்தில் கொழும்புக்கு சென்று தனிமைப்படுத்தல் விதிகளை மீறி தனது குடும்பத்தினரை திருகோணமலைக்கு அழைத்துச் சென்ற பொலிஸ் அதிகாரி சட்டரீதியான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார்.

குறித்த பொலிஸ் அதிகாரி, மற்றும் அவரது குடும்பத்தினரை 14 நாட்கள் தனிமையில் இருக்க தற்போது பணிக்கப்பட்டுள்ளதுடன் அவரது அதிகார துஸ்பிரயோகம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து மேலும் தெரியவருவதாது,

பொலிஸ் அதிகாரி எந்த அனுமதியும் பெறாது, தனது உறவினர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரை கொழும்பில் இருந்து திருகோணமலையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

கொழும்பு அதிக ஆபத்து நிறைந்த பகுதியாக அறிவிக்கப்பட்ட பின்னர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த சமயம் இந்த நடவடிக்கையை அவர் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் தனிமைப்படுத்தலை மீறியதற்காக குறித்த பொலிஸ் அதிகாரிமீது விசாரணை நடந்து வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ன.
Powered by Blogger.