ஊரடங்கு சட்டத்தை மீறி சாராய விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது!!!
(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை-மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறி அனுமதிப்பத்திரம் இல்லாமல் சாராய விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரை நேற்றிரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பன்குளம் பகுதியைச் சேர்ந்த 51 உடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கின்ற கட்டத்தில் சாராயப் போத்தல்களை வீட்டில் மறைத்து வைத்திருந்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் ஒன்பது சாராய போத்தல்கள் உடன் வயோதிபர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
கைது செய்யப்பட்ட வயோதிபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.