Header Ads

Breaking News
recent

வைத்தியசாலைகளுக்கு சக்கர நாற்காலிகள் அன்பளிப்பு!

( அப்துல்சலாம் யாசீம்) 
 தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில்கொண்டு திருகோணமலை வைத்தியசாலைகளில் சக்கர நாற்காலி குறைபாடாக காணப்படுவதை நிவர்த்தி செய்யும் முகமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரானின் UNV நிறுவனமும் பாதிஹ் கஸ்ஸாலியின் அல் ஹித்மதுல் உம்மா ஆகிய நிறுவனங்களும் இணைந்தே இந்த சக்கர நாட்காளிகளை அன்பளிப்பு செய்திருந்தன.

இதன்படி கிண்ணியா தள வைத்தியசாலைக்கு மூன்று சாக்கர நாற்காலிகளும் மூதூர்,  தோப்பூர்,  குச்செவெளி,  நிலாவெளி,  புல்மோட்டை வைத்தியசாலைகளுக்கு தலா இரண்டு நாற்காலிகளும் கப்பல்துறை ஆயுல்வேத வைத்தியசாலைக்கு ஒரு நாற்காலியும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கிண்ணியா நகர பிதா நளீம் UNV நிறுவனத்தின் செயலாளர் அப்துல் சமத் சதாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Powered by Blogger.