Header Ads

Breaking News
recent

விஷேட பூசையும் நிவாரண வழங்களும்!!


(அப்துல்சலாம் யாசீம்)
திருக்கோணேஸ்வரத்தில் விஷேட அபிஷேகம் ஆராதனைகள் இன்று காலை 6.30 மணியளவில் நடைபெற்றது.
தற்போது நிலவும் கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தி மக்களின் நின்மதியான வாழ்வை ஏற்படுத்த வேண்டி இந்த விஷேட பிரார்த்தனை பூசை, அபிஷேகங்கள் நடாத்தப்பட்டதாக ஆலய பணிப்பாளர்சபைத்தலைவர் கே.அருள்சுப்பிரமணியம் குறிப்பிட்டார். தற்போது ஏற்பட்டுள்ள சூழலில் உலகம் பூராவும் மக்கள் பாதிக்கப்பட்ட வண்ணமுள்ளனர்

நமது நாட்டிலும் பாதிப்பின் தன்மை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இன்று வெளிக்கிழமை பல இந்து ஆலயங்களிலும் விஷேட பூஜைவழிபாடுகள் இடம்பெற்றன.

அதனடிப்படையில் திருக்கோணேசர் ஆலயத்திலும் இந்நிகழ்வு நடைபெற்றன. வரும் 6.4.2020 இல் வருடாந்தக்கொடியேற்ற நாளாகும் தற்போதைய சூழலில் வரடருந்த பிரமோற்சவம் நிறுத்தப்பட்டுள்ளது. அயினும் குறித்த தினத்திலும் விஷேட அபிசேகம் நடாத்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் தலைவர் அருள்சுப்பிரமணியம் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை தொழில் பாதிப்புக்குள்ளான மூதூர் பிரதேசத்தின் பின்தங்கிய கிராமங்களுக்கு அலயத்தின் முதற்கட்ட நிவாரணப்பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.



Powered by Blogger.