21வயது இளம்பெண் சடலமாக மீ ட்பு…
(பிராந்திய நிருபர் பிரணவன்)
வவுனியாவில் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் 21 வயதுடைய இளம்பெண் கிணற்றில் வீழ்ந்து தற்கொலை
வவுனியா செட்டிக்குளம் துடரிக்குளம் பகுதியில் நேற்றிரவு (03.05.2020) 10.00 மணியளவில் கிணற்றில் வீழ்ந்து 21 வயதுடைய இளம் பெண்ணொருவர் தற்கொலை செய்துள்ளார்.
செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் குறித்த பெண் நேற்றிரவு (03.05.2020) 10.00 மணியளவில் கிணற்றில் வீழ்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் கிணற்றில் வீழ்ந்ததினை அவதானித்த உறவினர்கள் அயலவர்களின் உதவியுடன் கிணற்றிலிருந்து அவரை மீட்டெடுத்து வவுனியா செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி குறித்த 21 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்.
தற்கொலைக்கான காரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன் அவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
திருக்கேதீஸ்வரநாதன் கலைவாணி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்த நபராவர்.

