"உங்களுக்கு வீடு - நாட்டிற்கு சுபீட்சம்" 6வது வீடு கையளிப்பு !!!
(திருகோணமலை - பாயிஸ்)
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்குட்பட்ட வறுமைக்கோட்டின்கீழ் வாழும் குடும்பங்களுக்கான "உங்களுக்கு வீடு நாட்டிற்கு சுபீட்சம்" எனும் தொனிப்பொருளில் இன்றைய தினம் ஆறாவது வீட்டுத்திட்டத்தினை பிரதேச செயலாளர் திரு.அருள்ராஜ் மற்றும் மாவட்ட முகாமையாளர் திரு.ஹேமகுமார ஆகியோரின் தலைமையில் இன்று (24) வில்கம் விஹாரை பிரதேசத்தில் வீட்டு உரிமையாளர்க்கு உத்தியோக பூர்வமாக கையாளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர் இன்னும் பல உத்தியயோகத்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



