யாழ் மறைமாவட்டத்தின் மூத்த குருவான அருட்தந்தை நேசநாயகம் அடிகளார் இன்று இறைவனடி சேர்ந்தார்.
(TST Thuyavan)
யாழ் மறைமாவட்டத்தின் ஏழாலை தலத்திருச்சபையை சார்ந்த அருட்தந்தை நேசநாயகம் 1968ம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு யாழ், மன்னார் மறைமாவட்டங்களில் இறைப்பணி ஆற்றினார். நேசப்பா என அனைவராலும் அழைக்கப்பட்டு அன்புசெய்யப்பட்டார். ஒய்வுநிலைக் குருவாக ஆயர் எமிலியானுஸ்பிள்ளை இல்லத்தில் தனது இறுதிக் காலத்தை அமைதியாக கழித்து வருகின்ற வேளையிலே 14.07.2020 இன்று காலை இறைபதம் அடைந்தார்
