Header Ads

Breaking News
recent

கொரோனா வைரஸ் தொற்று – இன்றைய நிலவரம்


நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த 36 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து தொள்ளாயிரத்து 55 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 80 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், வைத்திய கண்காணிப்பின் கீழ் 114 பேர் உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது

மேலும், கொரோனா தொற்றினை கண்டறிய நாடு முழுவதும் இதுவரை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 765 பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.