சிரமதான பணியிள் ஈடுபட்ட பொலிஸார்:இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 154வது ஆண்டு நிறைவு
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று காலை வவுனியா பொலிஸாரினால் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா மக்களுக்காக எம்மால் முடிந்த சேவைகளை சிறப்பாக செய்வோம் எனும் அடிப்படையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் உட்பகுதி மற்றும் வெளிபுறங்களை சுத்தம் செய்யும் முகமாக சிரமதான பணி வவுனியா பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


