கொரோனாவினால் இலங்கையில் மற்றுமொரு உயிரிழப்பு!
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த 54 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்த நிலையிலேயே இந்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த பெண் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தவர் என சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
