மின்னல் தாக்கியதில் கணவன் மனைவி இருவரும் பலி!!!
அம்பாறை மாவட்டத்தில் இன்று (30) ஏற்பட்ட பாரிய இடி மின்னலில் திருக்கோவில் பிரதேச வினாயகபுரத்தைச்சேர்ந்த கணவனும் மனைவியும் பலியாகியுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.
மேலும் இச்சம்பவம் இன்று வெள்ளிகிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்றதாகவும் இருவரின் சடலம் தாற்றபோது அக்கரைப்பற்று வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

