Header Ads

Breaking News
recent

காட்டு யானையின் தாக்குதலில் வயோதிப பெண் பலி!!!


(முஹம்மட் ஹாசில்) 

அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஹலகம பகுதியில் காட்டு யானையின் தாக்குதலினால் வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (29) இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த பெண், கஹட்டகஸ்திகிலிய-மீமின்னாவல, இஹலகம பகுதியைச் சேர்ந்த சுத்தாகே விமலாவத்தி (64) எனவும், பொலிஸார் தெரிவித்தனர்.
Powered by Blogger.