வரதட்சணைக்கு (சீதனம்) தடை : பாகிஸ்தான் அரசு!!!!
அதேவேளை திருமணத்தின் போது வரதட்சணை எடுப்பதை சட்டவிரோதமாக்கிய முதல் முஸ்லீம் நாடாக பாகிஸ்தான் இடம்பிடித்துள்ளது.
பாக்கிஸ்தானின் மத விவகார அமைச்சரின் சமீபத்திய தீர்மானத்தில் வரதட்சணை பாரம்பரியத்தை தடை செய்ய முடிவு செய்துள்ளது. இதில் மணமகனும் அவரது குடும்பத்தினரும் வரதட்சணை கேட்கிறார்கள் பின்னர் அவர்கள் அதை காட்சிக்கு வைக்கின்றனர்.
மணமகனுக்கு வழங்கப்பட்ட பரிசு மற்றும் வரதட்சணை செலுத்தி விட்டே ஒரு பெண் திருமண பந்தத்தில் நுழைய வேண்டும்.
தற்போது புதிய சட்டத்தின்படி அனுமதிக்கப்பட்ட வரதட்சணை வெறும் உடைகள் (மணமகனுக்கு மட்டும்) மற்றும் படுக்கை விரிப்புகள் மட்டுமே.
விவாகரத்து வழக்கில், மணமகனின் தரப்பு அனைத்து பரிசுகளையும் வரதட்சணையையும் அந்தப் பெண்ணுக்குத் திருப்பித்தர வேண்டும் என பாகிஸ்தான் அரசு சட்டம் போட்டுள்ளது.
