நுரைச்சோலையில் விபத்து : கல்பிட்டி பிரதேச எல்லை முழுதும் மின்சார தடை!!!!
இன்று காலை கல்பிட்டி - பாலாவி வீதி நுரைச்சோலை பகுதியில் வேன் வண்டி ஒன்று மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தின் காரணமாகவே இன்று கல்பிட்டி பிரதேச எல்லை முழுதும் மின்சார வினியோகம் தடை பட்டுள்ளதாக நுரைச்சோலை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தற்போது திருத்த வேலைகள் இடம்பெறுவதாகவும் இன்னும் சில மணி நேரங்கள் மின்சாரத்தை வினியோகிக்க முடியும் எனவும் மேலும் தெரிவித்துள்ளனர்.

