மைனா வளர்த்தவர்க்கு நீதிமன்றத்தினால் தண்டப்பணம்!!!!
மாத்தளை பகுதியில் பூ மைனா வளர்த்த நபருக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ரூபா 40000 தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது .
அதுபோன்று பச்சை கிளி ,மதுரங் கிளி ,மைனா, மர அணில், அணில் இது போன்ற காட்டில் வாழக்கூடிய பறவைகள் ,விலங்குகளை வீட்டில் வளர்ப்பதை கண்டறிந்தால் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்படும்.
இது போன்ற சம்பவம் ஒன்று அண்மையில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


