கிண்ணியா பிரதேச செயலக குடும்பத்தினருக்கு ரூபா 10000பெறுமதியான உலர் உணவு பொருள் வழங்கிவைப்பு!!!
இன்று (09) கிண்ணியா பிரதேச செயலகத்தில் கொவிட் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற நிலைப்பாட்டில் சுயதனிமைப்படுத்தலில் இருந்த குடும்பத்தினருக்கு ரூ: 10000/= பெறுமதியான உலர் உணவு பொருள் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் இவ் வைபவத்திற்கு விசேட விருந்தினர்களாக திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு:கபில அதுக்கோரல அவர்களும், மாவட்ட செயலாளர் திரு,பாண்டிகோரல அவர்களும், கிண்ணியா சுகாதார வைத்திய Dr.A.M.M.அம்ஜித் அவர்களும் மற்றும் கிண்ணியா பிரதேச செயலாளர் முகம்மது கனி அவர்களும் கலந்துகொண்டு பொதிகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

