சிலாவத்துறை பகுதியில் கொவிட் 19 தொற்றோடு சம்பந்தப்பட்டவர்கள் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
(முஸாதிக் - முசலியூரான்)
சிலாவத்துறை பகுதியில் கொவிட் 19 தொற்றோடு சம்பந்தப்பட்டவர்கள் அம்பியுலன்ஸ் வாகனம் மூலம் இன்று வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
குறித்த நபர்களோடு சம்பந்தப்பட்டவர்களை இணங்கானும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது முசலி பிரதேச செயலாளர், முசலி சுகாதார வைத்தியர், முசலி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய சுகாதார பரிசோதகர்கள், சிலாவத்துறை பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.



