இலங்கையில் அதிகரிக்கும் Covid-19 மரணம்
இலங்கையில் கொரோனா தொற்று 45 ஆவது மரணம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்று 45 ஆவது மரணம் தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிக்கையில், .கொழும்பு 10 மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 68 வயதான பெண் ஒருவர் தனது வீட்டில் உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனையில் கொவிட் 19 தொற்று அதிகரித்தமையால் ஏற்பட்ட அதிகரித்த உயர் இரத்த அழுத்த நிலைமையினால் ஏற்பட்ட மாரடைப்பு மரணத்திற்கான காரணமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இது வரையில் இலங்கையில் பதிவான கொவிட் 19 தொற்றுக்குள்ளான உயிரிழந்த மொத்த நோயாளர்களி;ன் எண்ணிக்கை 45 ஆகும் என தெரிவித்தார்.
