தற்போது கிடைத்த செய்தி : திருகோணமலையில் மேலும் 12பேருக்கு கோவிட் -19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது !!!!
-திருகோணமலை ஜமாலியா பகுதியில் மாட்டிறைச்சி கடை விற்பனையாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் அவரது உறவினர்கள் 13 பேருக்கு அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இன்று (20) மாலை மேற்கொண்ட அன்டிஜென் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இத்தகவலை திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் சையொழிபவன் உறுதிப்படுத்தியுள்ளார்.
