Header Ads

Breaking News
recent

இந்தியாவில் இருந்து கடத்திவரப்பட்ட 532 கிலோ மஞ்சள் தீக்கிரை!!!






இந்தியாவில் இருந்து மன்னார் பகுதிக்கு சட்டவிரோதமாக கடத்திவரப்பட்டு மன்னார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட 532 கிலோ கிராம் இன்று மன்னார் பொலிஸ் உதவி அதியட்சகர் கஸ்தூரி ஆராய்சி முன்னிலையில் மன்னார் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி c.p.ஜெயதிலக

தலைமையில், பொலிஸ் தடவியல் நிபுணர்கள் (soco) இனைந்து மன்னார் நகர சபைக்கு சொந்தமான மலக்கழிவகற்றல் நிலையத்தில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது

சுகாதார சேவைகள் அமைச்சின் செயளாலரால் அனுப்பி வைக்கப்பட சுற்று நிருபத்தின் அடிப்படையில் கொரோனா தொற்று அபாயம் உடைய கடத்தல் பொருட்களை உடனடியாக தீக்கிரையாக்கும் படியான அறிவுறுத்தலின் அடிப்படையில் மேற்படி மஞ்சள் கட்டிகள் முதற்கட்டமாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளது

மன்னார் பேசாலை தாழ்வுபாடு தலைமன்னார் கடல்பகுதிகள் ஊடாக இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட மஞ்சள் கட்டிகளே மேற்படி அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது
Powered by Blogger.