காட்டு யானையின் சடலம் ஒன்று மீட்பு
வவுனியா ஓமந்தை இறம்பைக்குளம் பகுதியில் காட்டு யானையின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள காணி ஒன்றில் யானையின் சடலம் இருப்பதை அவதானித்த காணியின் உரிமையாளர் ஓமந்தை பொலிசாருக்கு தகவல் தெரியப்படுத்தியிருந்தார்.சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை பார்வையிட்டதுடன்,விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

