அடை மழை காரணமாக கிளிநொச்சி பகுதியில் உள்ள வீதி ஒன்று ஆபத்தான நிலையில்
கிளிநொச்சி மாவட்டம் உமையாள்புரம் விளாவோடையில் உள்ள பாலத்தின் மேலாக வெள்ள நீர் பாய்ந்து கொண்டிருப்பதனால் கொங்கிறீட் வீதி மண்ணரிப்புக்கு உட்பட்டுள்ளது.
வீதியின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினரால் மண் மூட்டைகள் போடப்பட்டுள்ளன.
எனவே இவ் வீதியினூடாக வாகனங்கள் செல்வது மிக ஆபத்தானது அத்துடன் மக்களும் இப் பாலத்தின் ஊடாக அவதானமாக செல்லுமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.


