இலங்கை விமானப் படையக்கு சொந்தமான விமானம் மாயம் - விமானி மரணம்
காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானம் கந்தளாய் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும் குறித்த விமானத்தில் பயிற்சியை மேற்கொண்ட விமானியும் உயிரிழந்துள்ளதாகவும் விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருகோணமலை சீனக்குடாவிலிருந்து புறப்பட்ட இலங்கை விமானப்படைக்கு சொந்தமான PT-6 விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பி.டி -6 விமானம் காணாமல் போயுயிருந்ததாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
