கிண்ணியா ஜனாஸா எரிப்புக்கான போராட்டத்திற்கு நீதி மன்ற தடை உத்தரவு!!!
ஜனாஸா எரிப்புக்கான போராட்டமொண்ரை கிண்ணியாவில் நடாத்த இன்று காலைஏட்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் அதனை கிண்ணியா போலீசார் நீதிமன்றம் ஊடாக தடை உத்தரவை பிறப்பித்ததனால் இவ் அமைதி போராட்டம் நடக்கமுடியாமல் போனது.
மேலும் வீட்டிலிருந்தவாறே தங்களது போராட்டங்கள் தொடரும் என ஏட்பாட்டுச்குழுவின் பொறுப்பாளரும் கிண்ணியா நகரசபை உறுப்பினருமான எம் எம் மஹ்தி தெரிவித்தார்.
சிவில் அமைப்புகளுக்கான இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். வெள்ளை கபன் சீலை துணியினை கட்டி அமைதியான போராட்டமாக ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் கிண்ணியா பகுதியில் இன்று (27) இது இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
