புகையிரதங்களூடாக மண் கொண்டு செல்லும் நடவடிக்கை ஆரம்பம்!!!!
ஜனாதிபதியின் எண்ணக்கருவில் வாகனப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் நாட்டில் பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கொழும்பு போன்ற பகுதிகளுக்கு மண் கொண்டு செல்லும் கனரக வாகனங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் புகையிரதங்களூடாக மண் கொண்டு செல்லும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது.
இதில், மட்டக்களப்பு-புனாணை புகையிர நிலையத்திலிருந்து கொழும்புக்கு மண்களை ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்றது. இதன் மூலம் ஒரு தடவையில் 100 கியூப் மண் கொழும்புக்கு கொண்டு செல்லப்படுகின்றது.

