திருகோணமலையில் சில பகுதிகள் முடக்கம் !!!!!
திருகோணமலை - ஜமலியா பிரதேசத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை சில பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளது எமது பிராண்திய செய்தியாளர் தெரிவித்தார்
அதனடிப்படையில் ஜமாலியா,துளசி புரம் மற்றும் ஸ்ரீமாபுர பிரதேசத்தில் சில பகுதிகளே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஜமாலியா பள்ளி நிருவாகத்தினரும் பொது மக்களிடம்
இது தொடர்பான தெளிவுட்டல்களும் பள்ளி ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தி வருவதாகவும் பொது மக்கள் இது தொடர்பில் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நேற்றைய தினம் இப்பிரதேசங்களில் கொரோனா தொற்றுக்குள்ளான 15 பேர் கண்டறியப்படத்தினனை அடுத்து இவ் முடக்கள் செயற்ப்பாடு மேற்க்கொள்ளப்பட்டதுடன் திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை 21 கோவிட்-19 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


