Covid-19 தொற்றுக்குள்ளான பெண் - இரட்டை குழந்தை பிரசவம்
கிழக்கு கொழும்பு ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த கொவிட் 19 தொற்றுக்குள்ளான தாயொருவர் இரட்டை குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
இந்நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளான தாயொருவர் இரட்டை குழந்தைகளை பிரசவித்த இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
தாய் மற்றும் குழந்தைகள் நலமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
