உக்குவளை பகுதியில் மண் சரிவு 5 வீடுகள் சேதம்
மாத்தளை – உக்குவளை பகுதியில் ஏற்பட் மண் சரிவினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலையால் உக்குவளை பிரதேச சபைக்குட்பட்ட எல்வல பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

வீடுகளின் சுவர்களில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், நிலத்திலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதனால் 5 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.