Header Ads

Breaking News
recent

கிளிநொச்சியில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின!!


வடக்கில் பெய்து வரும் தொடர் மழையுடனான காலநிலையால் கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தால் 190 குடும்பங்கள் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். 

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட், கோவில்வயல் , இயக்கச்சி, முகாவில், சோரன்பற்று, தர்மகேணி, புலோப்பளை, தம்பகாமம், பளை, அல்லிப்பளை, கச்சார்வேலி, அரசங்கேணி, இத்தாவில், முகமாலை மற்றும்,வேம்பொடுகேணி கிராமங்களைச் சேர்ந்த 190 குடும்பத்தை சேர்ந்த 597 பேர் பாதிப்படைந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

மேலும் பாதிப்புக்குள்ளான இடங்களை இன்றைய தினம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் சென்று பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்டவர்களை  மீட்கும்  பணியில் இராணுவத்தினர் ஈடு படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .







Powered by Blogger.