கொவிட் 19 தொற்றிலிருந்து மேலும் சிலர் பூரண குணம்!!!
நாட்டில் தற்போது கொவிட் 19 தொற்று காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டு வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிலர் குணமடைந்து வீடுகளுக்கும் அனுப்பப்படுகின்றனர்
அதனடிப்படையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று மேலும் 890 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில்தொற்றுக்குள்ளானவர்களில் 73,546 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் கொவிட் 19தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 433 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
