இவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட மாட்டாது- அதிர்ச்சியில் மக்கள்!!!!
இலங்கையில் மதுபானம் மற்றும் சிகரட் பாவிப்போருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க முடியாது என சிகரட் மற்றும் மதுசாரம் தொடர்ரபான தேசிய அதிகாரசபையின் தலைவர் சமாதி ராஜபக்ஷ கூறியுள்ளார்.
மதுபோதை மற்றும் புகைத்தல் பொருட்களை பயன்படுத்துவோருக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவுள்ள நிலையில் அவர்களுக்கு தடுப்பூசி வழங்க முடியாது என்றார்.
எனவே இவ்விடயம் தொடர்பில் அனைவரும் கவனத்தில் கொள்ளுமாறும், மதுபானம் மற்றும் புகைத்தல் பாவனையாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டுமெனின், அவர்கள் தடுப்பூசி வழங்கப்பட்ட தினத்திலிருந்து குறைந்தது 6 மாதங்களாவது அவற்றை பயன்படுத்தாது இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
