ஓட்டமாவடி -நாவலடி பிரதான வீதியில் டிப்பர் விபத்து : உதவியாளர் உயிரிழப்பு
ஓட்டமாவடி -நாவலடி பிரதான வீதியில் மணல் ஏற்றிச்சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் உதவியாளர் ஒருவர் வாகனத்தின் கீழே அகப்பட்டு உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
அவரது உடலின் சில பாகங்கள் வாகனத்துக்கு அடியில் சிதைந்து காணப்படுவதாகவும், வாகனத்தின் சாரதி காயங்களுடன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் ஆரம்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு நோக்கி மணல் ஏற்றிச்சென்ற வாகனமே விபத்துக்குள்ளாகியுள்ளது. கள தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ஏறாவூர் முஹம்மது அஸ்மி



